தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

காஞ்சிபுரம் அருகே பாலாறு மேம்பாலத்தில் லாரி பழுது! போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம் அருகே பாலாறு மேம்பாலத்தில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

போக்குவரத்து நெரிசல் - கோப்பிலிருந்து

Updated On :13 ஜூன் 2026, 12:32 pm IST

காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் லாரி பழுதானதால் 2 கி.மீ. தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் லாரி ஒன்று பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த லாரியின் முன்புற டயர் திடீரென கழன்று ஓடியது. ஓட்டுநர் சாமர்த்தியமாக செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தின் நடுப்பகுதியில் லாரியை நிறுத்தினார். மேம்பாலத்தின் நடுவில் லாரி பழுதாகி நின்றதால் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

போக்குவரத்து நெரிசல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை நீடித்ததால், வேலைக்குச் செல்வோர் மற்றும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, பழுதான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.