கேரளத்தில் போக்குவரத்து நெருக்கடியால் ஆம்புலன்ஸ் பயணம் தாமதமானதன் காரணமாக இளைஞர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் உள்ள பழங்குடியினர் மருத்துவமனையிலிருந்து, திருச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது, போக்குவரத்து நெரிசலால் தாமதமானதால் இவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அட்டப்பாடியில் உள்ள வலமாரியைச் சேர்ந்த சஜீவ் குமார் (25) என்று குறிப்பிட்ட காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது:
பழங்குடியினர் சமுதாயத்தைச் சார்ந்த சஜீவ் குமார் என்னும் இந்த இளைஞர் கடும் காய்ச்சல் காரணமாக அட்டப்பாடியில் உள்ள பழங்குடியினர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.
வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஆம்புலன்ஸுல் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அட்டப்பாடி மலைப்பாதையில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்குச் செல்ல ஒரு மணி நேரம் தாமதமானது. இருப்பினும், மருத்துவமனையை அடையும் போது சஜீவ் குமாரின் நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Summary
A young man died after the ambulance transporting him from a tribal hospital in the Attappadi area of Palakkad district, Kerala, to the Medical College Hospital in Thrissur was delayed by traffic congestion.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவசர சிகிச்சை கிடைக்காததால் அவதிப்படும் மலைக் கிராம மக்கள்! தொன்னகுட்டஅள்ளி துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

காஞ்சிபுரம் அருகே பாலாறு மேம்பாலத்தில் லாரி பழுது! போக்குவரத்து பாதிப்பு

கம்பம்-கம்பம்மெட்டு சாலையில் ஜூன் 8 முதல் போக்குவரத்து மாற்றம்

சாலை விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

