இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

திமுக கூட்டணியில் சிபிஐ விலகல்! யார் இல்லாவிட்டாலும் கவலையில்லை: ஆர்.எஸ். பாரதி

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாவிட்டாலும் கவலையில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

News image

ஆர்.எஸ். பாரதி - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 5:07 pm IST

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாவிட்டாலும் கவலையில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது, "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1971-ல் எங்களுடன் இருந்தனர்; பின்பு சென்று விட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 1978-ல் இருந்தனர்; பின்னர், சென்று விட்டனர்.

இவர்கள் இப்படி பலமுறை எங்களுடன் இருந்தார்கள், போனார்கள். அதேபோல இன்று பிரிந்து செல்கின்றனர்.

இப்போதைக்கு திமுக கூட்டணியில் நீடிக்கவில்லை என மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். எப்போதைக்கும் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. திமுகவை பொருத்தவரையில் - வந்தால் அவர்களோடு; வராவிட்டால் அவர்களில்லாமல்.

அவர்கள் எதிர்த்தால், அவர்களையும் எதிர்த்து திமுகவின் பயணத்தை தொடரும் என்பதுதான் வரலாறு. அவர்களுக்கு இந்த ஒருநாளில் ஏற்பட்ட சங்கடத்தை நீங்கள்தான் கேட்டறிய வேண்டும்.

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் கவலைப்படுவதேயில்லை" என்று தெரிவித்தார்.

Summary

No concern even if Communist parties are not in the DMK alliance: Former Minister R.S. Bharathi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.