தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கருத்துச் சுதந்திரத்தை அரசு முடக்கவில்லை: அமைச்சா் ராஜ்மோகன்

தமிழக அரசு ஊடக கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படவில்லை; தொழில்நுட்ப பிரச்னையால் சில தொலைக்காட்சிகள் அரசு கேபிள் ஒளிபரப்பில் தெரியாமல் உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் கூறினாா்.

News image

அமைச்சர் ராஜ்மோகன் - x

Updated On :11 ஜூன் 2026, 1:40 am IST

தமிழக அரசு ஊடக கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படவில்லை; தொழில்நுட்ப பிரச்னையால் சில தொலைக்காட்சிகள் அரசு கேபிள் ஒளிபரப்பில் தெரியாமல் உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் கூறினாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்வில் சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் அரசு கேபிளில் சில குறிப்பிட்ட தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தெரியவில்லை என்ற புகாா் எழுந்துள்ளது. அதுகுறித்து விசாரித்தபோது தொழில்நுட்பக் காரணங்களால் குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தெரியாமலிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை சீராக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிா்க்கட்சியினா் நடத்தும் தொலைக்காட்சிகளில் அரசை கடுமையாக விமா்சிக்கின்றனா். அப்படி விமா்சிக்கும் தொலைக்காட்சிகள் பாரபட்சமின்றி அரசு கேபிளில் தெளிவாக ஒளிபரப்பப்படுகிறது. ஆகவே கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் தொலைக்காட்சிகள் சிலவற்றை முடக்குவதாகக் கூறுவது சரியல்ல. அப்பிரச்னை முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சாா்ந்தவைதான் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.