ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் தொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் முதல்வர் இதனை தினந்தோறும் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசினர் விருந்தினர் மாளிகையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், "மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான தற்காலிகத் திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் இணைந்து முழுமையான மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். விசாரணையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் உரிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
மாநகராட்சியில் எந்தெந்த இடங்களில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பது கண்டறியப்பட்டு, அதற்கேற்ப வழக்குகள் பதிவு செய்யப்படும். எங்கு ஊழல் அல்லது முறைகேடு நடைபெற்றிருந்தாலும் அவை விரைவாக அடையாளம் காணப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அடைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோதமாக பார்கள் செயல்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்.
ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் தொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகிறது. காணாமல் போன தரவுகள் என்னென்ன, அவற்றின் தன்மை என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை முதல்வர் தினந்தோறும் கண்காணித்து வருகிறார். திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க் மீட்கப்பட்டால், அதிலுள்ள தகவல்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எந்தெந்த தரவுகள் காணாமல் போயுள்ளன என்பது குறித்து விசாரணை நிறைவடைந்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாத வகையில் சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Summary
Minister Nirmal Kumar said regarding the hard disk theft incident
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்துறையில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் நிர்மல் குமார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிலைப்பாடு; அமைச்சர் நிர்மல் குமார் பதில்! | TVK

விஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்

அதிக மின் பயன்பாடே மின்வெட்டுக்கு காரணம் : அமைச்சர் நிர்மல் குமார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

