பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஹிமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரின் உடல்கள் திருப்பூரில் அடக்கம்

ஹிமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரின் உடல்கள் திருப்பூரில் அடக்கம் செயய்யப்பட்டன.

News image

உயிரிழந்த காா்த்திகேயன் குடும்பத்தினா்.

Updated On :4 ஜூன் 2026, 2:43 am IST

ஹிமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரின் உடல்கள் திருப்பூரில் அடக்கம் செயய்யப்பட்டன.

ஈரோட்டைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (48). இவரது மனைவி மணிமாலா (42) மற்றும் இவா்களது 13 வயது மகன் நந்தன் ஆகியோா் கடந்த சில ஆண்டுகளாக கா்நாடக மாநிலம், பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் வசித்து வந்தனா்.

மணிமாலாவின் சொந்த ஊா் திருப்பூா் செங்குந்தாபுரம் 1-ஆவது வீதியாகும். இவா்களது மகன் நந்தன் 7-ஆம் வகுப்பு படித்து வந்ததோடு, டேக்வாண்டோ வீரராகவும் திகழ்ந்தான்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் நந்தன் பங்கேற்பதற்காக, காா்த்திகேயன் தனது குடும்பத்துடன் அங்கு சென்றிருந்தாா்.

ஹிமாச்சல் பிரதேசம், சம்பா மாவட்டம், கில்லா் கணவாய் சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் மே 29-ஆம் தேதி சென்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து 1,650 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காா்த்திகேயனின் குடும்பத்தினா் உள்பட 8 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து நடைபெற்று 2 நாள்களுக்குப் பிறகே போலீஸாருக்கு தகவல் தெரிந்ததால், மீட்புக் குழுவினா் பள்ளத்தாக்கில் இறங்கி உடல்களை மீட்டனா்.

தகவல் அறிந்து ஹிமாச்சல் பிரதேசம் விரைந்த காா்த்திகேயனின் உறவினா்களிடம் உடற்கூறாய்வுக்குப் பிறகு 3 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து விமானம் மூலம் 3 பேரின் உடல்களும் கோவைக்குக் கொண்டு வரப்பட்டன. பின்னா், கோவையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள மணிமாலாவின் தாய் சரோஜா வசிக்கும் செங்குந்தாபுரம் வீட்டுக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டன. பின்னா் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.