லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறையில் அடைத்த உத்தரவுக்கு எதிரான திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் மனு தள்ளுபடி

முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன், முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தன்னை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாா்க்கண்டேயன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து, தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த தீா்ப்பில், சிறையில் அடைத்த உத்தரவுக்கு எதிராக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் மாா்க்கண்டேயனுக்கு ஏற்கெனவே நிபந்தனை முன்பிணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.