மதுரை மீனாட்சியம்மன் - - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) காலை நடைபெற்றது.
வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

விருந்தில் பங்கேற்றோர். - படம்: டிஎன்எஸ்
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் வெற்றிலைப் பாக்கு வைத்து, விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 1 லட்சம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சார்பில், மதுரையில் கடந்த 27 ஆண்டுகளாக ஸ்ரீமீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, நிகழாண்டும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் திருக்கல்யாணத்துக்கு வரும் பக்தா்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
கோதுமை இனிப்பு, கல்கண்டு சாதம், வெண்பொங்கல், சாம்பார் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் இந்த விருந்தில் அடங்கும். விருந்துக்குத் தேவையான காய்கறிகளை மாட்டுத்தாவணி சந்தை வியாபாரிகளும், அரிசியை பழமுதிர்ச்சோலை திருவருள் பக்த சபை அறக்கட்டளையைச் சோ்ந்த உறுப்பினர்கள், மீனாட்சி அம்மன் பக்தர்களும் வழங்கியுள்ளனர்.

வெற்றிலைப் பாக்கு வைத்து விருந்துக்கு அழைப்பு. - படம்: டிஎன்எஸ்
திருக்கல்யாணத்தையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுற்றுப் பகுதிகள், மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானம், உணவு வகைகள் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Summary
On the occasion of the divine wedding of Goddess Meenakshi and Lord Sundareswarar in Madurai, a feast has been arranged and is being served to 100,000 devotees.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் ஆய்வு!

மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


