தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமல் கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாட்டில் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டிருக்கும் ஆழ்ந்த கவலையுடனும், அதிருப்தியுடனும் நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பெருநகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்திகள் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களின் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல பேருந்து வசதியோ, பிற போக்குவரத்து வசதியோ இல்லாமல் உள்ளனர்.
மாநிலப் போக்குவரத்துக் கழகமும் நிர்வாகமும் திட்டமிட்டுச் செய்த தவறான ஏற்பாட்டின் விளைவாகவே இது தோன்றுகிறது. இந்திய அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாக்களிக்கும் அடிப்படை உரிமையின் மீதான நேரடித் தாக்குதலாகவே இது கருதப்படுகிறது.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலும், பிற இடங்களிலுள்ள இதுபோன்ற முனையங்களிலும் தேர்தல் நாளன்று காணப்படும் காட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளன.
சென்னை மற்றும் போக்குவரத்து முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள மாநிலப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கும் உடனடியாக பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
போக்குவரத்து இடையூறுகளால் தாமதமாக வந்த வாக்காளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதையும், நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தையும் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8:00 மணி வரை நீட்டிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
People Suffer Due to Lack of Buses! Polling Must Be Extended Until 8 PM! — Vijay Writes to ECI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவினர் உற்சாக வரவேற்பு! வெற்றி சான்றிதழ் பெறுகிறார் விஜய்!!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


