தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கழுதைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

வாக்குப்பதிவு மையங்களுக்கு கழுதைகள் மூலம் அனுப்பி வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

News image

கழுதைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - படம்: எக்ஸ்/ இந்திய தேர்தல் ஆணையம்

Updated On :22 ஏப்ரல் 2026, 6:41 pm IST

மலைக் கிராமங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட போடி சட்டப்பேரவைத் தொகுதியில் கொட்டகுடி, குரங்கனி, கொழுக்குமலை, சென்ட்ரல் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை வசதி இல்லாததால், வாக்குச் சாவடி மையத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் மீண்டும் கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கீழே கொண்டு வரப்படவுள்ளது.

போடி பேரவைத் தொகுதியில் சென்ட்ரல் மலைக் கிராமத்தில் 55 வாக்காளர்களுக்காக தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போடி அருகே உள்ள மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Summary

Voting machines were transported by donkeys to polling stations located in hill villages and installed there.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.