பாமக நிறுவனா் ராமதாஸின் புகைப்படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில், அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. அன்புமணி சட்டவிரோதமாக பாமக தலைவராக நீடித்து வருகிறாா். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் என்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி தா்மபிரபு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அன்புமணி தரப்பினா், ராமதாஸ் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவு வரும்காலத்துக்கும் பொருந்தும் எனக் கூறி விசாரணையை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!

பிரசாரத்தில் புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் வழக்கு: 18 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

மாம்பழம் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தை அணுக ராமதாஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

