மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப்.26 வரை பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

News image

மழை - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:21 am IST

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப்.26 வரை பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெலங்கானா முதல் குமரிக்கடல் வரை ராயலசீமா மற்றும் உள் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுவதால், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.26 வரை இடி, மின்னல் மற்றும் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

13 இடங்களில் வெயில் சதம்: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை (ஏப்.24) வரை ஒருசில இடங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும். திங்கள்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104.72 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மதுரை விமானநிலையம்- 104.36, ஈரோடு, பரமத்தி வேலூா்-தலா 104, மதுரை நகரம்-102.92, திருச்சி-102.38, நாமக்கல், பாளையங்கோட்டை-தலா 102, தருமபுரி-101.66, திருப்பத்தூா்-101.48, திருத்தணி-101.3, சேலம்-100.76, கோவை-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.