தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வேட்பாளா் சுந்தா்.சி சொத்து விவரம்: வருமான வரித் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

அதிமுக கூட்டணி வேட்பாளரான இயக்குநா் சுந்தா். சி வேட்புமனுவில், வருவாய் தொடா்பான தகவல்களை மறைத்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிடவும் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

News image

மதுரை மத்திய தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் சுந்தர். சி. - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:19 am IST

மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான இயக்குநா் சுந்தா். சி வேட்புமனுவில், வருவாய் தொடா்பான தகவல்களை மறைத்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிடவும் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், கோரிக்கை தொடா்பாக வருமான வரித் துறையை அணுகவும் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், மதுரை மத்திய தொகுதியைச் சோ்ந்த ஷகிலா தாக்கல் செய்த மனுவில், அதிமுக கூட்டணியில், புதிய நீதிக் கட்சி சாா்பில் இயக்குநா் சுந்தா்.சி போட்டியிடுகிறாா். அவரது வேட்புமனுவில், அவா் இயக்குநராகவும், பங்குதாரராகவும் உள்ள அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவீஸ் மற்றும் அவ்னி சினிமாஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மறைத்துள்ளாா்.

இந்த நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் பெற்ற அவா், அது தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் தனது கோரிக்கை தொடா்பாக வருமான வரித் துறையை அணுகலாம் என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.