தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓசூர் அருகே திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகையில், தமிழக உரிமைகளை திமுக மட்டும்தான் காக்க முடியும் என நிரூபித்துவிட்டு கெத்தாக வந்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்துவிட்டு கிருஷ்ணகிரிக்கு நான் வந்திருக்கிறேன். அன்புச் சகோதரர் ராகுல் காந்தி நேற்று தமிழகத்தில் பிரசாரம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மோடியால் கன்ட்ரோல் செய்ய முடியாது என ராகுல் காந்தி சொன்னார்.
நாளை நான் சென்னையில் பிரசாரம் செய்கிறேன். ராகுல் குமரியில் பிரசாரம் செய்யவுள்ளார். ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரமாக அறியப்பட்ட ஓசூர் நவீன தொழில் மையமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 43,000 தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது. இதைக்கூட தட்டிக்கேட்க முடியாமல் இருக்கிறார் பழனிசாமி. தமிழ்நாட்டு உரிமைக்காக பாஜகவிடம் குரல் கொடுக்க முடியாத பழனிசாமி என்னைப் பார்த்து கேள்வி கேட்கிறார். காரில் செல்லும்போது கிரிக்கெட் பார்த்தது தவறாம்.
காரில் போகும்போது முகத்தை மூடியதுதான் கேவலம். முதல்வர் கிரிக்கெட் பார்க்கலாமா என கேட்கிறார். முதல்வர் கிரிக்கெட் பார்ப்பது தவறு கிடையாது. முதல்வராக இருந்துகிட்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிஞ்சிகிட்டேன் என சொன்னதுதான் மிகப்பெரிய கேவலம். தொலைக்காட்சியில் நேற்றிரவு மோடி பேசியிருக்கிறார். அதை பிரதமர் மோடியின் உரை என சொல்வதைவிட பாஜக தலைவர் மோடியின் அரசியல் உரை என்றுதான் சொல்லனும்.
தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது தேசியக் கொடி பின்னணியில் வார்த்தைக்கு வார்த்தை எதிர்க்கட்சிகளை திட்டிப் பேசியிருக்கிறார். தேர்தல் கூட்டங்களில் பேசுவதையெல்லாம் அரசு சார்பான உரையில் பேசியிருக்கிறார். இது அப்பட்டமான விதி மீறல். இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
CM Stalin has stated that the BJP is hindering the development of Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் ஆதரவில்லை! பாஜக அறிக்கை

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக பின்னடைவு!
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் எல்லைச்சாமி யார்? ஆ. ராசா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

