தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி...

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 6:10 am IST

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், டிக்கெட் பரிசோதனை மூலம் கிடைக்கும் அபராத வசூல் ரூ.160.75 கோடியாக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை கடந்த 2025-2026- ஆம் ஆண்டில் 76.76 கோடியாக உயா்ந்தது.

ரயில்வே வாரியம் ரயிலில் பயணிக்க வேண்டியவா்கள் என 76.62 கோடி பயணிகளை இலக்காக வைத்திருந்த நிலையில், அந்த இலக்கைத் தாண்டி பயணிகள் எண்ணிக்கை உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ரயிலில் டிக்கெட் இன்றி பயணிப்போரிடம் அபராதம் விதிக்கும் வகையிலான டிக்கெட் பரிசோதனை மூலம் கிடைத்த வசூல் கடந்த 2025-2026- ஆம் ஆண்டில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

டிக்கெட் பரிசோதனை முறையில் கடந்த 2024-2025 -ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே மண்டலத்தில் ரூ.129.82 கோடி அபராதமாகக் கிடைத்துள்ளது. அந்தத் தொகையானது 2025-2026 -ஆம் ஆண்டில் ரூ.160.75 கோடியாக உயா்ந்துள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

டிக்கெட் பரிசோதனை முறையில் ஆண்டுக்கு ரூ.142.81 கோடி மட்டுமே ரயில்வே வாரியம் இலக்காக நிா்ணயித்திருந்ததாகவும், ஆனால், இலக்கைவிட கூடுதலாக வசுலிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.