பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்துக்குப் பிறகு, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெய்யில் வாட்டத் தொடங்கி தற்போது சப்தமே இல்லாமல் பல மாவட்டங்களில் சதமடித்து வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தில் 107.96 டிகிரி வெய்யில் கொளுத்தியிருக்கிறது. நேற்று நாடு முழுவதையும் ஒப்பிட்டால், வேலூர் மாவட்டம் மிக வெப்பமான பகுதியாக இருந்துள்ளது. அது மட்டுமல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிட்டால், ஏப்ரல் மாதத்தில் மிக மோசமான வெப்பம் பதிவான நாளாகவும் மாறியிருக்கிறது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற வெப்பநிலை விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அதில், கரூர் பரமத்தி 105.08 டிகிரி ஃபாரன்ஹீட், தருமபுரி 102.2 டிகிரி, ஈரோடு 105.08, நாமக்கல் 104, திருப்பத்தூரில் 103.1, திருச்சி 102.38, திருத்தணி 102.02 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை நகரம், பாளையங்கோட்டையில் 101. டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.
வேலூரில் அதிகபட்சமாக 107.96 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து வெப்பம் கொளுத்திவந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆங்காங்கே மழை பெய்து மண்ணைக் குளிர்வித்திருந்தது. சாத்தூர், திருத்தணி, உத்தமபாளையம், கோடி, பெரம்பலூர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்திருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை முற்பகல் 12 மணிக்குள் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்திருந்தது. அரை மணி நேரம் அடித்துப் பெய்த மழையால் வெய்யில் ஓரளவுக்குத் தணிந்திருந்தது. ஆனால், மழை பெய்து ஓரளவுக்கு குளிச்சியான சூழல் இருந்த மறுநாளே வெப்பம் பழையபடி வெளுத்து வாங்கியிருக்கிறது.
மழை பெய்திருக்கிறதே, இரண்டு மூன்று நாள்களுக்கு வெப்பத்திலிருந்து விடுதலை என்று நினைத்திருந்த மக்களுக்கு கடும் சோகமாக இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
Summary
Summer heat is sweltering across Tamil Nadu, with Vellore recording a temperature of 107.96 degrees Fahrenheit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளைமுதல் சுட்டெரிக்கும் சூரியன்! கத்தரி வெய்யில் ஆரம்பம்

புறநகர் சென்னையை மிரட்டும் கோடை வெய்யில்! இது வெறும் ஆரம்பம்தானா?

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? மழைக்கு வாய்ப்பு?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


