சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5,938 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. அதுபோலவே, தமிழகம் முழுவதும் 3,302 பதற்றம் நிறைந்த இடங்கள் என்றும் அறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை ரூ.462 கோடி மதிப்புள்ள பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலை நடத்த ரூ.975 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதுபோலவே, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ரூ.1,009 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் பணிகளுக்காக வரும் 13ஆம் தேதிக்குள் துணை ராணுவப் படையினர் தமிழகம் வருவார்கள். இதுவரை 85 வயதுக்கு மேற்பட்ட 2.5 லட்சம் பேர் தபால் வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
Summary
Archana Patnaik reveals how many crores will be spent to hold Tamil Nadu Assembly elections
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒடிஸாவில் கணவன் வீட்டின் முன் கர்ப்பிணி தர்னா: வெட்டிப் படுகொலை செய்த கணவன் குடும்பம்! - பட்நாயக் இரங்கல்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி

தமிழ்நாட்டில் ரூ.1262 கோடி பறிமுதல்! - அர்ச்சனா பட்நாயக்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


