தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சீர்காழி பிரதான வீதிகளில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, பொதுமக்கள், மாணவர்கள் என முதல்வருடன் கைகுலுக்கி சுயபடம் எடுத்துக் கொண்டனர்.
சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் இன்று(ஏப். 7) மாலை சீர்காழியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தேநீர் கடையில் முதல்வர் ஸ்டாலின். - படம்: DNS
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு புதுச்சேரி பிரசாரத்தை முடித்துக் கொண்டு, தமிழக முதல்வர் திருவெண்காட்டில் உள்ள அவரது மாமனார் இல்லத்திற்கு வருகை தந்தார்.
தொடர்ந்து, இன்று காலை சீர்காழி தென்பாதி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் இருந்து நடைப்பயிற்சியை தொடங்கினார். அங்கு உள்ள உழவர் சந்தைக்கு மு. க. ஸ்டாலின் சென்று, காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் விற்பனை குறித்தும் அவர்களுக்குள்ள குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

சீர்காழி டீக்கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு . மாணவிகளுடன் கலந்துரையாடினார். தினமணி நாளிதழ் வாசிக்க வைக்கப்பட்டிருந்தது. - படம்: DNS
தொடர்ந்து வழிநெடுகிலும் பொதுமக்கள் மு. க .ஸ்டாலின் உடன் சுயபடம் எடுத்தும் கைகுலுக்கியும் மகிழ்ந்தனர். பின்னர், கச்சேரி சாலை அரசு மருத்துவமனை சாலை, விகாரி மேலவீதி, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் ஆகிய சாலைகளின் வழியே மக்களைச் சந்தித்தவாறு நடைப்பயிற்சி செய்தார்.
சீர்காழி அரசு மருத்துவமனை அருகில் கூடியிருந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். நடைப்பயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின் சாலையில் இருந்த தேநீர் கடைக்கு திடீரென சென்று தேநீர் அருந்தினார். தேநீர் வழங்கிய ஊழியரிடம் வியாபாரம் எவ்வாறு உள்ளது எனக் கேட்டறிந்தார்.

முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு. - படம்: DNS
அங்கு வந்த மாணவ, மாணவிகள் முதல்வருடன் கலந்துரையாடி சுயபடம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, அங்கிருந்த மக்களிடம் கலந்துரையாடினார்.
சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகளைப் பார்த்த முதல்வர் மு. க. ஸ்டாலின், தனது நடைப்பயிற்சி நிறுத்தி அவர்களிடம் ஆர்வமாக கலந்துரையாடினார். மேலும், சாலையோரம் இருந்த மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், பஞ்சு குமார், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் உடன் இருந்தனர்.
Summary
As Tamil Nadu Chief Minister M.K. Stalin went for a morning walk along the main streets of Sirkazhi, members of the public and students shook hands with him and took selfies.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் கொடியேற்றம்!

மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


