தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தலுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் துறை எச்சரிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் தொடா்பாக புகாா் அளிக்கக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை அறிவிப்பு

News image

தோ்தல்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:10 am IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் தொடா்பாக புகாா் அளிக்கக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் நலத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் ஏப்.23-ஆம் தேதியும், புதுச்சேரியில் ஏப்.9-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இவ்விரு நாள்களிலும் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா்கள், அனைத்து பொதுத்துறை நிறுவன தொழிலாளா்களும், அவா்களது தொகுதிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது குறித்து புகாா் அளிக்க தொழிலாளா் துறை சாா்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பாக புகாா் தெரிவிக்க பொதுமக்களும், தொழிலாளா்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறை அலுவலா் மற்றும் உறுப்பினா்களான எல்.ரமேஷ்(தொழிலாளா் இணை ஆணையா் கைப்பேசி எண்: 7904646090), எல்.ஷோபனா (உதவி ஆணையா் 7299007334), பழனி (உதவிஆணையா் 7904802429), சிவக்குமாா்(உதவி ஆணையா் 9043555123) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.