ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Updated On :4 ஏப்ரல் 2026, 4:23 pm IST

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசின் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய வெள்ளை அறிக்கையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் சனிக்கிழமை வெளியிட்டார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே செல்வதால் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறோம். தமிழக அரசின் கருவூலம் காலியாக உள்ளது. தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கடன் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு வாங்கிய பல ஆயிரம் கோடியில் 10%கூட திட்டங்களாக மாறவில்லை. தமிழ்நாடு திவால் ஆகும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. திமுக அரசு வாங்கிய கடன் தொகைக்கு ரூ.76,000 கோடி மட்டுமே வட்டியாக செல்கிறது. ரூ.80,000 கோடி ஜிஎஸ்டி வருவாயை மத்திய அரசு கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கூடுதலாக நிதி கொடுத்துள்ளது அந்த நிதி எங்கே போனது?. திமுக அரசு வாங்கிய கடனில், மக்களுக்கு செய்தது என்ன?. திமுக அரசு வாங்கிய பெரும் கடன் தொகை எங்கே போனது?. திருவள்ளுவர், காமராஜர் மண் மு.க.ஸ்டாலினின் குடும்ப ஏடிஎம்ஆக மாறிப்போனது. நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற மாநில அரசு, திமுக அரசுதான்.

தமிழ்நாட்டுக்கு கிடைத்த நல்ல வர்த்தக வாய்ப்புகளை திமுக அரசு வீணடித்துவிட்டது. போதைப் பொருள்களால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கை பாழாகி வருகிறது. தமிழ்நாட்டில் 15,000 சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.

டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் ஊழல் செய்து, வழக்குகளில் சிக்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது வழக்குகள் உள்ளன. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதும். டாஸ்மாக் விற்பனையில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.

டாஸ்மாக் மோசடி விவகாரம் வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

Union Minister Piyush Goyal has raised the question, 'Where did the loan taken by the DMK government go?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.