ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!

தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 11:02 am IST

நேரத்துக்கு ஏற்றார்போல சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவது மக்கள் அனைவரும் அறிந்ததே, தற்போது தேர்தல் நேரம் என்பதால், வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் விதவிதமான மோசடிகள் நடப்பது குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை, பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்யவும் என்றும், உங்கள் வாக்காளர் எண், பதிவேற்றப்பட்ட பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும் என்பது போன்று விதவிதமாக எஸ்எம்எஸ்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இதுபோன்ற எந்தவொரு தகவலையும் தேர்தல் ஆணையம் அனுப்பாது என்றும், மக்கள் இது குறித்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் காவல்துறையால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள வயதானவர்கள், விழிப்புணர்வு பெறாதவர்களுக்கும் இது குறித்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, புதிய வாக்காளர் பட்டியலில், உங்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தீர்களே அது ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணம் அறிய என்று பல விதங்களில் குறுஞ்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

எனவே, வாக்காளர் அடையாள அட்டை குறித்து குறுஞ்செய்திகள் எது வந்தாலும், அதிலிருக்கும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம், தேர்தல் ஆணையம், தனிப்பட்ட முறையில் யாருக்கும் இதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்பாது, இணையதள மோசடியாளர்கள், இதுபோன்ற லிங்குகளை அனுப்பி, உங்கள் செல்போனில் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கு மற்றும் பிற விவரங்களைத் திருடி சைபர் மோசடியில் ஈடுபடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப நிலை அறிவது என அனைத்தையும் உரிய இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளவும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Summary

People are advised to be cautious if they receive an SMS in the name of voter card update as it is election time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.