அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

உலகக் கோப்பையின் 1000-ஆவது போட்டி: துனிசியாவை வெளியேற்றியது ஜப்பான்!

கால்பந்து உலகக் கோப்பையின் 1000-ஆவது போட்டி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் ஜப்பான் வீரர்கள். - படம்: ஏபி

Updated On :21 ஜூன் 2026, 2:12 pm IST

கால்பந்து உலகக் கோப்பையின் 1000-ஆவது போட்டியில் ஜப்பான் அணி துனிசியாவை வீழ்த்தி, உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றியது.

ஆடவர் அணிகளுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் 1930 முதல் நடைபெற்று வருகின்றன. இதன் ஆயிரமாவது போட்டி இன்று இந்திய நேரப்படி 9.30 மணிக்கு நடைபெற்றது.

மெக்சிகோவின் மான்டேரி அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் குரூப் எஃப் பிரிவில் இருக்கும் துனிசியா - ஜப்பான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜப்பான் அணியினர் 4 கோல்கள் அடித்தார்கள்.

அதில் 4ஆவது நிமிஷத்தில் டைச்சி கமடா, 31ஆவது நிமிஷத்தில் அயாசே உவேடா , 69ஆவது நிமிஷத்தில் ஜுன்யா இடோ, 83ஆவது நிமிஷத்தில் அயாசே உவேடா மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்கள். இறுதியில் ஜப்பான் 4-0 என வென்றது.

இந்தப் போட்டியில் தோல்வியுற்றதால் துனிசியா வெளியேறியது. ஜப்பான் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது. நெதர்லாந்து அணி மொத்தமாக 7 கோல்கள் அடித்துள்ளதால் முதலிடத்தில் இருக்கிறது.

ஜப்பான் டாப் 2 இடத்திற்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றாலும், அதிக கோல்கள் அடித்துள்ளதால் மூன்றாவது இடம் பிடித்தாலும் நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாக வாய்ப்பிருக்கிறது.

ஜப்பான அணி 2019 முதல் ஐரோப்பிய அணிகளிடம் தோல்வியுற்றதே இல்லை என்ற தனது சாதனையை தக்க வைத்துள்ளது. வரும் வியாழக்கிழமை ஸ்வீடன் உடன் தனது கடைசி போட்டியில் மோதவிருக்கிறது.

Summary

Ayase Ueda scores twice in Japan's 4-0 win against Tunisia in 1,000th men's World Cup match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.