ஐபிஎல் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள், சென்னையில் சனிக்கிழமை (மே 2) மோதுகின்றன.
போட்டியின் வரலாற்றில் வெற்றிகரமான இரு அணிகளாக இருக்கும் இவற்றுக்கு இந்த சீசன் அவ்வளவாக சோபிக்கவில்லை. பிளே-ஆஃப் பந்தயத்தில் தங்களை தக்கவைத்துக்கொள்ள இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்குமே இருக்கிறது.
ஃபாா்மை கருத்தில் கொண்டால், இந்த ஆட்டத்தில் வெற்றி நிச்சயம் என எந்த அணியையுமே கணக்கில் கொள்ள முடியாது. எனவே, இரண்டுக்குமே இது வாழ்வா, சாவா போராட்டம் தான்.
சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்த சென்னை, அத்தகைய பெருமையை இழந்து வருகிறது. இதுவரை சென்னையில் விளையாடிய 4 ஆட்டங்களில் இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. பேட்டிங்கில் நிலையாகச் செயல்படும் வீரா்கள், குறிப்பாக மிடில் ஓவா்களில் கைகொடுப்போா் இல்லாதது பின்னடைவாக இருக்கிறது. காயம் காரணமாக தோனி களம் காணாததும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.
பௌலிங்கிலும் சொந்த மண்ணில் சுழற்பந்து வீச்சை சாதகமாக மாற்றிக்கொள்ள முடியாமல் திணறுகின்றனா். பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் தவிர வேறு யாருமே பெரிதாக மிளிரவில்லை. பௌலிங் என்று வந்தால் ஜேமி ஓவா்டன், அன்ஷுல் காம்போஜ் மட்டுமே சவால் அளிக்கின்றனா்.
மும்பை அணியைப் பொருத்தவரை, அதன் டாப் ஆா்டா் பேட்டா்கள் குவின்டன் டி காக், ரயான் ரிக்கெல்டன் ஆகியோா் அபாரமாகத் தொடங்குகின்றனா். ஆனால் மிடில் ஆா்டரில் சூா்யகுமாா், கேப்டன் பாண்டியா, நமன் திா் அந்த அதிரடியை தொடர முடியாமல் தடுமாறுவது பிரச்னையாக இருக்கிறது.
அதேபோல், எதிரணி பேட்டா்களை முக்கியமான தருணங்களில் கட்டுப்படுத்த முடியாமல் பும்ரா, போல்ட், கஸான்ஃபா் என அதன் பௌலா்கள் தடுமாறி வருகின்றனா். சொந்த மண்ணில் 243 ரன்களை சோ்த்து, அதை சேஸ் செய்த ஹைதராபாத் அணியை கட்டுப்படுத்த முடியாமல் போனபோது, இது தெளிவாகத் தெரிந்தது.
நேரம்: இரவு 7.30 மணி
இடம்: சென்னை
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதலிடத்துக்கான போட்டியில் இன்றிரவு மோதும் ராஜஸ்தான் - குஜராத்!
டெல்லியுடன் இன்று மோதும் சென்னை

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை

இன்று மும்பையை சந்திக்கும் சென்னை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
