தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!

கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

News image

குஜராத் டைட்டன்ஸ் வெற்றி - AP

Updated On :17 ஏப்ரல் 2026, 11:21 pm IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைந்தது. கொல்கத்தா அணி நிர்ணயித்த 181 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி ஓவரில் எட்டி வெற்றியை ருசித்தது.

அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் திடலில் இன்று(ஏப். 17) நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குஜராத் அணியில் முகமது சிராஜ் சிறப்பாகப் பந்துவீசி கொல்கத்தா அணியின் ரன் ரேட்டைக் குறைத்தார். அவர் 4 ஒவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

அடுத்து, 181 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி பவர் ப்ளே ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடியது. அந்த அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்தத் தோல்வி மூலம், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தை தக்க வைத்துக் கொண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.