பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ள அனுகுல் ராய்!

இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ள அனுகுல் ராய் குறித்து...

News image

அனுகுல் ராய். - படம்: எக்ஸ் / கேகேஆர்.

Updated On :21 மே 2026, 3:46 pm IST

இந்தியா ஏ அணியில் அனுகுல் ராய் (27 வயது) சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஹர்ஷ் துபேவுக்கு மாற்றாக கேகேஆர் அணியில் அசத்திய ஆல்ரவுண்டர் அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை, ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஏ அணிகள் மோதும் ஒருநாள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் வரும் ஜூன் 9- 21ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் ஹர்ஷ் துபேவுக்கு மாற்றாக அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹர்ஷ் துபே சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இதனால் இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியா ஏ அணி: திலக் வர்மா (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (துணைக் கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சந்து, சூர்யான்ஷ் ஷெட்கே, பிரப்சிம்ரன் சிங் (கீப்பர்), குமார் குஷாக்ரே (கீப்பர்), விப்ராஜ் நிகம், யஷ் தாக்குர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ், அர்ஷத் கான், அனுகுல் ராய்.

Summary

Anukul Roy added to India A squad for the upcoming tri-series in Sri Lanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.