பிரிட்டிஷ் ஒளிபரப்பு பொறியாளர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம் அவரது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளது.
ஒளிபரப்பு பொறியாளரான ஜேன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்டின் (76), மும்பையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, திங்கள்கிழமை (மார்ச் 30) காலை தனது அறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, விடுதி நிர்வாகத்தினரால் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ உடன் பணியாற்றி வந்த ஜேன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்டின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு எல்லாவித உதவிகளையும் செய்வதாகவும் செவ்வாய்க்கிழமை உறுதியளித்தது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “எங்களின் ஒளிபரப்புச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இருந்த அர்ப்பணிப்பு மிகுந்த ஒளிபரப்புப் பொறியாளரான ஜேன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்டின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாயகத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.
இந்த இக்கட்டான சூழலில் அவரது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் ஐபிஎல் நிர்வாகம் வழங்க உறுதி அளிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உடற்கூராய்வில் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Expressing condolences on the passing of a British broadcast engineer, the IPL administration has stated that it is prepared to extend all necessary assistance to his family.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதலிடத்துக்கான போட்டியில் இன்றிரவு மோதும் ராஜஸ்தான் - குஜராத்!
ஐபிஎல் இறுதிப்போட்டி சின்னசாமி திடலில் கிடையாது! ஏன்?
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

