ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை இல்லாத அளவிலான பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அஹமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து மதிப்புமிக்க கோப்பையை மூன்றாவது முறையாக இந்திய அணி வென்றுள்ளது.
மேலும், டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து இருமுறை பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி பெற்றுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குக் காரணமான அணியின் வீரர்கள், ஊழியர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் பிசிசிஐ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. எதிர்காலத்தில் நமது அணி இதேபோன்று மேலும் பல வெற்றிகளைப் பெறவேண்டும்.
இந்த மாபெரும் வெற்றிக்காக ரூ. 131 கோடியை பரிசுத் தொகையாக இந்திய அணிக்கு பிசிசிஐ வழங்குகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இதுவரை வழங்கப்பட்டதிலேயே அதிக அளவிலான பரிசுத்தொகை இதுவாகும். இதற்கு முன்னர் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலகக் கோப்பையை வென்றபோது ரூ. 125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றபோது ரூ. 58 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டிருந்தது. மேலும், கடந்தாண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றபோது ரூ. 51 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
Summary
BCCI has announced the prize money for the Indian cricket team that won the T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி

உலகக் கோப்பை வில்வித்தை: அணிகள் ஏமாற்றம்; தனிநபா் ஏற்றம்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து மகளிரணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
