பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த ஹாரி ப்ரூக்!

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் முதலிடம் பிடித்துள்ளார்.

News image

ஹாரி ப்ரூக் - படம் | AP

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (ஜூன் 10) வெளியிட்டது. அதில், டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனான ஹாரி ப்ரூக் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, முதலிடத்தில் இங்கிலாந்து அணியின் சக வீரரான ஜோ ரூட் இருந்த நிலையில், அவரை ஹாரி ப்ரூக் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் அரைசதம் எடுத்ததன் மூலம், ஹாரி ப்ரூக் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மற்றும் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணியைப் பொருத்தவரையில், கேப்டன் ஷுப்மல் கில் இரண்டு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் சதம் விளாசியதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

Summary

England player Harry Brook has secured the top spot in the ICC Test batter rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.