பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்ரல் 3) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸுக்கு, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். குறிப்பாக, பிரியான்ஷ் ஆர்யா அதிரடியில் மிரட்டினார். அவர் 11 பந்துகளில் 39 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தார். அவரது அதிரடியான ஆட்டம் அவருக்குப் பிறகு களமிறங்கிய வீரர்கள் எந்தவொரு அழுத்தமுமின்றி விளையாட உதவியது.
இந்த நிலையில், அதிரடியாக விளையாடிய இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிரியான்ஷ் ஆர்யா மிகவும் அபாரமாக விளையாடினார். அவர் பந்துகளின் லென்த்தை சிறப்பாக கணித்து சிக்ஸர்கள் விளாசினார். மாட் ஹென்றி மற்றும் கலீல் அகமதின் பந்துவீச்சில் அவர் அபாரமாக விளையாடினார். அவர் லெக் திசையில் மிகவும் நன்றாக விளையாடக் கூடியவர். ஆஃப் திசையிலும் அவரால் நன்றாக விளையாட முடியும். அதனால் அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் என்றார்.
சிஎஸ்கேவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian cricketer Cheteshwar Pujara has praised Punjab Kings' young player, Priyansh Arya.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கார்த்திக் சர்மாவை நினைத்து பெருமைப்படுகிறோம்; சிஎஸ்கே பயிற்சியாளர் பாராட்டு!

அபிஷேக் சர்மா எளிதாக சதங்கள் விளாசுகிறார்: புஜாரா

சிக்ஸர்கள் விளாச நான் பயிற்சி மேற்கொள்வதில்லை: பிரியான்ஷ் ஆர்யா

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


