தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா!

தஞ்சாவூரில் நடைபெற்ற 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா குறித்து...

News image

பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா! - படம்: DNS

Updated On :31 மார்ச் 2026, 1:20 pm IST

தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி வீதியுலா இன்று(மார்ச் 31) நடைபெற்றது.

வீதிகளில் உலா வந்த பச்சைக்காளி பவளக்காளியை ஏராளமான பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.

தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த விழா, இந்தாண்டு கடந்த 9 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான காளி புறப்பாடு, இன்று அதிகாலை நடைபெற்றது. வெவ்வேறு ஆலயங்களில் இருந்து பச்சைக்காளி - பவளக்காளி புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

வீதிகளில் உலா வந்த காளியைப் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பச்சைக்காளி - பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி நாளை(மார்ச் 31) நள்ளிரவு நடைபெறுகிறது.

Summary

The street procession of the 600-year-old Pachaikali and Pavalakkali took place today (March 31) in Thanjavur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.