பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வேலூர் அருகே கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா!

எர்த்தாங்கல் கெங்கையம்மன் சிரசு திருவிழா பற்றி..

News image

கெங்கையம்மன் சிரசு திருவிழா

Updated On :8 ஜூன் 2026, 1:28 pm IST

எர்த்தாங்கல் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் கிராமத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ கெங்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிலையில், இன்று கெங்கை அம்மன் சிரசு காளியம்மன் கோயிலிருந்து மேளதாளங்கள் முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற வழிநெடுகிலும் மலர்மாலை மற்றும் எலுமிச்சைப்பழம் மாலை ஆகியவற்றை சிரசு மீது வீசி வழி நெடுகிலும் பக்தர்கள் தரையில் படுத்தும், சூர தேங்காய்களை உடைத்தும், சிலம்பாட்டத்துடன் அம்மனை ஆலயம் கொண்டு வரப்பட்டு அம்மன் உடல் மீது சிரசு பொருத்தப்பட்டது.

மேலும், அலகுகுத்தி அந்தரத்தில் தொங்கியவாறு பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். கெங்கை அம்மன் சிரசு திருவிழாவைக் காணச் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.எ

The Erthangal Gangaiamman Sirasu Festival was celebrated with great grandeur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.