பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வெந்து தணிந்தது வீடு

கதை நடக்கும் இடம் மட்டுமல்ல சம்பவங்கள், வசனங்கள் மூலம் கதை நடக்கும் காலமும் சில கதைகளில் உணரப்படுவது சிறப்பு.

News image
Updated On :18 மே 2026, 6:41 pm IST

வெந்து தணிந்தது வீடு - சித்ரூபன்; பக். 192, ரூ. 250, சுவாசம் பதிப்பகம், சென்னை -600 127, ✆ 81480 66645.

கதை சொல்வது மரபு ரீதியான ஒன்று. மனிதன் தன் அனுபவங்களை அடுத்தவர்க்கும், அடுத்த தலைமுறையினர்க்கும் சொல்வதையே கதை என்கிறோம்.

சித்ரூபனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூலில் பல்வேறு வார, மாத இதழ்களில் பிரசுரமான அவரது 16 கதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு கதையின் தலைப்பே தொகுப்புக்கும் வைக்கப்பட்டுள்ளது.

'தோழரின் தோழி' என்ற சிறுகதையில் பரசுராமர் என்பவரின் தொழிற்சங்க ஈடுபாடும், மனிதாபிமானமும், அவரது காதலும் நல்ல முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

'காசி யாத்திரை' சிறுகதை, சுமங்கலி என்ற பெண்மணி குறித்து, உணர்வுபூர்வமாக காசியின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் மகுடமாகத் திகழ்கிறது, 'இலக்கிய விபத்து' என்ற சிறுகதை. அது ஃபேஸ்புக்கிலும், குழுக்களிலும் சிறுகதைகளை எழுதிவரும் சித்குப்தன் என்ற எழுத்தாளர் குறித்த கதை. இன்றைய ஃபேஸ்புக் எழுத்தாளர்களின் மன ஓட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுவது போல் கதையின் ஆரம்பமும் முடிவும் எழுதி இருக்கும் விதமும் மிகவும் ரசிக்க வைக்கிறது.

இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலங்களில் நடப்பதாக உள்ளது. சில கதைகள் சிறுகதை இலக்கணத்தில் அடங்காமல் இருந்தாலும் நல்ல கதைகளே. கதை நடக்கும் இடம் மட்டுமல்ல சம்பவங்கள், வசனங்கள் மூலம் கதை நடக்கும் காலமும் சில கதைகளில் உணரப்படுவது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.