தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இந்திய இலக்கியச் சிற்பிகள்

தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகை உரை இவரது வாழ்நாள் சாதனை உழைப்பாகும்.

News image
Updated On :30 மார்ச் 2026, 6:53 pm IST

இந்திய இலக்கியச் சிற்பிகள் ச.பாலசுந்தரனார்-பா. மதிவாணன்; பக். 128; ரூ. 100; சாகித்திய அகாதெமி, சென்னை-600 018, ✆ 044-2431 1741.

பள்ளிக் கல்வியைத் தொடரமுடியாமல் (ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திக் கொண்டார்) உலகியலில் உழன்று ஓவியமும் சிற்பமும் சிறிதே பயின்று, கல்லுப் பட்டறையிலும், துணிக் கடையிலும் வேலை செய்து, பத்தாண்டுகளுக்குப் பிறகு, கல்லூரியில் சேர்ந்து வித்வான் ஆகி, பின்னாளில் தவிர்க்க முடியாத தமிழ் ஆளுமையாக உயர்ந்து பலருக்கும் பாடமானவர் பாலசுந்தரனார்.

பாலசுந்தரனார் பல்வேறு தளங்களில் புகழ்பெற்று விளங்கியவர். சிறந்த மரபுக் கவிஞராகவும், ஆய்வறிஞராகவும் விளங்கியவர். இவரின் இலக்கண உரைகள், இலக்கண நூலாக்கம் ஆகியவற்றுக்கு ஆய்வே அடிப்படை. கவிதைகள், கவிதைத் திறனாய்வுகள் என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

'வரலாறு எழுதும் அளவுக்கு என் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் பெரிதுமில்லை. அதனால், என் வாழ்க்கையில் நேர்ந்த, மறக்கமுடியாத சம்பவங்கள் சிலவற்றை 'நினைவலைகள்' என்னும் தலைப்பில் எழுதி வைத்தேன்' என்று தன்னடக்கத்துடன் கூறும் பாலசுந்தரனார், கரந்தைப் புலவர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்; மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்; பல்வேறு தமிழ் இலக்கிய இதழ்களில் எழுதியவர்.

தொல்காப்பியச் செம்மல் விருது, தமிழ்ப் பேரவை செம்மல் விருது, மாமன்னன் இராசராசன் விருது, இலங்கைப் பேராசிரியர் செல்வநாயகம் நினைவு விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகை உரை இவரது வாழ்நாள் சாதனை உழைப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.