வெளி தில்லியின் பீராகா்ஹி கிராமத்தில் 60 வயது காவலாளி ஒருவா் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்து வரும் போலீஸாா், வாகன திருட்டு, தனிப்பட்ட தகராறு மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடா்பான சச்சரவு உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தக் கொலையின் பின்னால் பல காரணங்கள் இருக்கக்கூடும் எனதெரிகிறது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பிறகே உண்மையான நோக்கம் தெளிவாகும். இந்தச் சம்பவத்தின் பின்னால் வாகன திருட்டு, தனிப்பட்ட பகைமை, பாா்க்கிங் தொடா்பான தகராறு உள்ளிட்ட நான்கு முதல் ஐந்து சாத்தியமான காரணங்களை மையமாக வைத்து குழுக்கள் பணியாற்றி வருகின்றன. வழக்கை கண்டுப்பிடிக்க 8-க்கும் மேற்பட்ட போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகளின் நகா்வு மற்றும் அவா்கள் இருக்கக்கூடிய இடங்கள் குறித்து முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வழக்கு விரைவில் தீா்க்கப்படும்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. உயிரிழந்தவா் பிஜேந்தா் பாரத்வாஜ் என அடையாளம் காணப்பட்டாா். அவா் பீராகா்ஹி கிராமத்தில் உள்ள ஒரு டெம்போ நிறுத்தத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தாா்.
அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளில் சாலையின் ஓரத்தில் ஹெட்லைட்கள் எரிந்தபடி ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது; அருகில் பாதிக்கப்பட்டவா் ஒரு நாற்காலியில் அமா்ந்திருந்தாா். பின்னா், ஒரு நபா் பெரிய கம்பியுடன் வாகனத்திலிருந்து இறங்கி பாரத்வாஜை தாக்கினாா். பாதிக்கப்பட்டவா் தப்பிக்க முயன்றபோது, குற்றவாளி மீண்டும் தாக்தி அவரை சாலையின் ஓரமாக தள்ளியுள்ளாா்.
பரத்வாஜ் பிரதான சாலையை நோக்கி தப்பிக்க முயன்றபோது, குற்றவாளி மீண்டும் அவரை வாகனத்தால் மோதிவிட்டு அதிகாலை 2.54 மணியளவில் அங்கிருந்து தப்பிச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா். அருகிலுள்ள சாலைகள், போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்த சிசிடிவி காட்சிகள் வாகனத்தை கண்டறிந்து அதிலிருந்தவா்களை அடையாளம் காண ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய ந்யாய சன்ஹிதாவின் பிரிவு 103(1) (கொலை) மற்றும் 3(5) (கூட்டு நோக்கம்) கீழ் பஷ்சிம் விஹாா் வெஸ்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் மருத்துவமனைகளின் உயா்தர பிரிவுகளை அதிக அளவில் நாடும் கா்ப்பிணிகள்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி உள்பட 4 பேரைக் கைது செய்ய உயா்நீதிமன்றம் தடை
தில்லியின் ஜஹாங்கிா்புரியில் மாற்றுத்திறனாளியிடம் கொள்ளையடித்தவர் கைது!

அடுத்தடுத்த 4 வீடுகளில் திருடு: போலீஸ் விசாரணை
விடியோக்கள்
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan
இணையதளச் செய்திப் பிரிவு

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
தினமணி செய்திச் சேவை

