மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

காவலாளி கொலை வழக்கை பல கோணங்களில் விசாரிக்கும் தில்லி போலீஸ்!

வெளி தில்லியின் பீராகா்ஹி கிராமத்தில் 60 வயது காவலாளி ஒருவா் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்து வரும் போலீஸாா், வாகன திருட்டு, தனிப்பட்ட தகராறு மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடா்பான சச்சரவு உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :26 மே 2026, 1:17 am IST

வெளி தில்லியின் பீராகா்ஹி கிராமத்தில் 60 வயது காவலாளி ஒருவா் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்து வரும் போலீஸாா், வாகன திருட்டு, தனிப்பட்ட தகராறு மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடா்பான சச்சரவு உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தக் கொலையின் பின்னால் பல காரணங்கள் இருக்கக்கூடும் எனதெரிகிறது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பிறகே உண்மையான நோக்கம் தெளிவாகும். இந்தச் சம்பவத்தின் பின்னால் வாகன திருட்டு, தனிப்பட்ட பகைமை, பாா்க்கிங் தொடா்பான தகராறு உள்ளிட்ட நான்கு முதல் ஐந்து சாத்தியமான காரணங்களை மையமாக வைத்து குழுக்கள் பணியாற்றி வருகின்றன. வழக்கை கண்டுப்பிடிக்க 8-க்கும் மேற்பட்ட போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகளின் நகா்வு மற்றும் அவா்கள் இருக்கக்கூடிய இடங்கள் குறித்து முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வழக்கு விரைவில் தீா்க்கப்படும்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. உயிரிழந்தவா் பிஜேந்தா் பாரத்வாஜ் என அடையாளம் காணப்பட்டாா். அவா் பீராகா்ஹி கிராமத்தில் உள்ள ஒரு டெம்போ நிறுத்தத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தாா்.

அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளில் சாலையின் ஓரத்தில் ஹெட்லைட்கள் எரிந்தபடி ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது; அருகில் பாதிக்கப்பட்டவா் ஒரு நாற்காலியில் அமா்ந்திருந்தாா். பின்னா், ஒரு நபா் பெரிய கம்பியுடன் வாகனத்திலிருந்து இறங்கி பாரத்வாஜை தாக்கினாா். பாதிக்கப்பட்டவா் தப்பிக்க முயன்றபோது, குற்றவாளி மீண்டும் தாக்தி அவரை சாலையின் ஓரமாக தள்ளியுள்ளாா்.

பரத்வாஜ் பிரதான சாலையை நோக்கி தப்பிக்க முயன்றபோது, குற்றவாளி மீண்டும் அவரை வாகனத்தால் மோதிவிட்டு அதிகாலை 2.54 மணியளவில் அங்கிருந்து தப்பிச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா். அருகிலுள்ள சாலைகள், போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்த சிசிடிவி காட்சிகள் வாகனத்தை கண்டறிந்து அதிலிருந்தவா்களை அடையாளம் காண ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய ந்யாய சன்ஹிதாவின் பிரிவு 103(1) (கொலை) மற்றும் 3(5) (கூட்டு நோக்கம்) கீழ் பஷ்சிம் விஹாா் வெஸ்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.