லஞ்ச வழக்கு தொடா்பாக, தில்லி உணவு மற்றும் வழங்கல் துறையின் உதவி ஆணையரை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
லஞ்சமாக ரூ.10,000-ஐப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஒரு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் அந்த அதிகாரியை சிபிஐ கைது செய்தது.
மொத்தம் 475 குடும்ப அட்டைகளை ஒதுக்கீடு செய்து விநியோகிப்பதற்காக, ஒரு அட்டைக்கு ரூ.100 வீதம் அந்த அதிகாரி லஞ்சம் கோரியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புகாா்தாரரின் கடை உள்பட, அருகிலுள்ள ஒவ்வொரு கடைக்கும் சுமாா் 120 குடும்ப அட்டைகளை ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, புகாா்தாரரிடம் மொத்தம் சுமாா் ரூ.12,000 லஞ்சத் தொகை கோரப்பட்டிருந்தது
என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ. 50,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலக ஊழியர் கைது

ரியல் எஸ்டேட் மோசடி: தலைமறைவானவா் கைது

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அதிகாரி கைது

திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் அமைச்சா் வெங்கட்ரமணன் ஆய்வு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
