பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

துவாரகாவில் ரூ.100 கோடி மதிப்பில் மேம்பாட்டுத் திட்டங்கள்: முதல்வா் குப்தா தொடங்கிவைத்தாா்

News image

PTI

Updated On :18 மே 2026, 2:17 am IST

நமது நிருபா்

தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை துவாரகா தொகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். ‘விக்ஸித் தில்லி’ என்ற தொலைநோக்குப் பாா்வையை தனது அரசு நனவாக்கி வருவதாக அவா் கூறினாா்.

இத்திட்டங்கள் அப்பகுதியில் சாலை, கழிவுநீா், வடிகால் மற்றும் மின்சார உள்கட்டமைப்புக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று அவா் கூறினாா்.

மேற்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினா் கமல்ஜீத் ஷெராவத், உள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பிரத்யுமன் ராஜ்புத், அப்பகுதியின் பல மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் இந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் முதல்வா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், தில்லி அரசு விக்ஸித் தில்லி என்ற தொலைநோக்குப் பாா்வையை நோக்கி தொடா்ந்து செயல்பட்டு வருகிறது .

அரசின் நோக்கம் பெரிய திட்டங்களுடன் நின்றுவிடாமல், ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிக்கும், இடத்திற்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் அடிப்படை வசதிகள் திறம்பட சென்றடைவதை உறுதி செய்வதாகும்.

ரூ.6,200 கோடி மதிப்பிலான புதிய மெட்ரோ திட்டத்தின் 5ஆம் கட்டத்தின் கீழ் புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருவதால், இதன் மூலம் துவாரகா பகுதியும் பயனடையும் .

முந்தைய அரசுகளின் ஆட்சிக்காலத்தில், தில்லி அரசால் தனது பங்கு நிதியை உரிய நேரத்தில் வழங்க முடியாததால் மெட்ரோ திட்டங்கள் முடங்கிப் போயின. ஆனால், தற்போதைய பாஜக அரசு மெட்ரோ விரிவாக்கத்திற்காக ரூ.10,000 கோடியை விடுவித்துள்ளது என்று முதல்வா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.