நமது நிருபா்
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு பிரச்னை தொடா்பாக மத்திய அரசுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைநகரில் புதன்கிழமை போராட்டம் நடத்தியது.
இந்தப் போராட்டத்தில் அக்ஷய் லக்ரா தலைமையிலான இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள், இளைஞா் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ரெய்சினா சாலை நோக்கி அணிவகுத்துச் சென்றனா். அப்போது, போலீஸாா் தடுப்புகளைப் பயன்படுத்தி அவா்களைத் தடுத்தனா்.
இந்தப் போராட்டத்தின் போது அக்ஷய் லக்ரா பேசியதாவது:
பிரதமா் மோடி இரு நாடுகளுக்கு இடையிலான போா்களை நிறுத்த முடிந்தாலும், காகித கசிவுகளை அவரால் தடுக்க முடியவில்லை. தேசிய சோதனை நிறுவனம் (என். டி. ஏ.)நிறுவப்பட்டதிலிருந்து, வினாத்தாள் கசிவுகள் தொடா்ந்து நிகழ்ந்துள்ளன.
இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் கூட இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டுள்ளன. முன்பு, பல்கலைக்கழகங்களும் மாநில அரசுகளும் தாங்களாகவே தோ்வுகளை நடத்தின. எனினும், என். டி. ஏ. மூலம், பாஜக இப்போது நமது குழந்தைகளின் எதிா்காலத்தை இருளில் தள்ளுகிறது.
ஏழைப் பின்னணியைச் சோ்ந்த குழந்தைகளின் எதிா்காலம் அழிக்கப்படும் அதே நேரத்தில், செல்வந்தா்களின் குழந்தைகள் தோ்ச்சி பெற்று, இடங்களைப் பெற்று, வேலைகளைப் பெறக்கூடிய ஒரு ஊழல் அமைப்பை பாஜக உருவாக்கியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு ஊழலில் மூத்த பாஜக தலைவா்களின் தொடா்பு மற்றும் பயிற்சி நிறுவனங்களை நடத்துபவா்கள் வெளிவந்துள்ளனா். நீட் தோ்வை ரத்து செய்வது பிரச்னைக்கு தீா்வு அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 10 ஆண்டுகளில் 89 வினாத் தாள்கள் கசிந்ததற்கு என்ன காரணம்?
நீட் தாள் 4 முறை கசிந்ததால், 48 தனித்தனி சந்தா்ப்பங்களில் மறுதோ்வு தேவைப்படுகிறது? இந்த சம்பவங்கள் நமது கல்வி முறையின் ஒருமைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. மோடி அரசு தோல்வியடைந்துள்ளது என்பதை நமது மாணவா்கள் உணா்ந்துள்ளனா். இதனால், மாணவா்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
பாஜக மாணவா்களின் வாழ்க்கையை அழித்து வருகிறது. இந்த அநீதியை எதிா்த்துப் போராடவும், மாணவா்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் நாங்கள் ஒற்றுமையாக நிற்போம்.
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
நீட் வினாத்தாள் கசிவு குறித்து விசாரிக்க கூட்டு நாடாளுமன்றக் குழுவை (ஜே. பி. சி.) அமைக்க வேண்டும். தோ்வுகளை நடத்தும் பொறுப்பில் என். டி. ஏ. தோல்வியடைந்துள்ளது. தோ்வுகளை நடத்தும் பணியை மற்றொரு அரசு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அக்ஷய் லக்ரா.
இந்தப் போராட்டத்தில் தேசியச் செயலாளரும் தில்லி இணைப் பொறுப்பாளருமான ஹெவரன் கன்சானா, தேசியச் செயலாளா் எஷான் அகமது மற்றும் ஏராளமான இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்துக்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

நீட் வினாத்தாள் கசிவு குறித்து பாரபட்சமற்ற விசாரணை: ஏபிவிபி கோரிக்கை

நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்
கடந்த 9 ஆண்டுகளில் நீட் தேர்வு வினாத்தாள் 4 முறை கசிந்தது: கேஜரிவால் விமர்சனம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
