வெளி தில்லியின் சுல்தான்புரி பகுதியில் சிறு பிரச்சினைகள் தொடா்பாக ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 18 வயது இளைஞா் ஒருவரை மூன்று சிறுவா்கள் கத்தியால் குத்தியுள்ளனா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இடது தொடையில் கத்திக்குத்து காயத்துடன் ஒரு இளைஞா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை பி. சி. ஆா் அழைப்பு வந்தது. காயமடைந்த நைதிக், சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். விசாரணையின் போது, நைடிக் போலீலாரிடம், 15 முதல் 16 வயதுக்குட்பட்ட 3 சிறுவா்கள்-சிறிய பிரச்சினைகள் குறித்து இளைஞருடன் முன்பு பகையில் இருந்ததால் அவரை கத்தியால் தாக்கினா்.
பாதிக்கப்பட்டவரின் வாக்கு மூலத்தின்படி அடிப்படையில், சுல்தான்புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒரு சிறுவன், கைது செய்யப்பட்டுள்ளாா். தாக்குதலில் ஈடுபட்ட மீதமுள்ள இருவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. கத்தியால் குத்தப்பட்டதற்கான உண்மையான காரணத்தை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உஸ்மான்பூரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

எம்சிடி காலனியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை
ஆட்டோ ஓட்டுநரைக் கத்தியால் குத்திய வடமாநில சிறுவா்கள் மூன்று போ் கைது
வட கிழக்கு தில்லியில் சிறுவன் கொலை: சிறாா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

