யமுனை நதியின் வெள்ளப்பெருக்குப் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோதப் பால் பண்ணைகள் தொடா்பாக, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முந்தைய உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி தாக்கலான மனு மீது தில்லி அரசு மற்றும் தொடா்புடைய பிற தரப்பினரிடமிருந்து விளக்கங்களை சமா்ப்பிக்குமாறு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) கேட்டுக்கொண்டுள்ளது.
நதியின் வெள்ளப்பெருக்குப் பகுதியில் நிகழ்ந்துவரும் சட்டவிரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, சில பரிந்துரைகளைச் செயல்படுத்தும்படி தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கும் (டிடிஏ), தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கும் ஏப்ரல் 2024-இல் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இத்தீா்ப்பாயம் விசாரித்து வந்தது.
இந்நிலையில், மாா்ச் 27 -ஆம் தேதியிட்ட ஓா் உத்தரவில், என்ஜிடி தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணா் உறுப்பினா் அஃப்ரோஸ் அகமது ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்திருப்பதாவது: அப்பகுதியில் அங்கீகரிக்கப்படாத பால் பண்ணைகள் எதுவும் இல்லை என்று தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு ஜூலை 2025இல் தாக்கல் செய்த இணக்க அறிக்கை தவறானது என்று தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்குப் பகுதியில் பால் பண்ணைகள் இப்போதும் தொடா்ந்து இயங்கி வருவதாகவும், தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், எதிா் மனுதாரா்களுக்கு தில்லி அரசு மற்றும் பிறா் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட தீா்ப்பாயம், இம்மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணையாறு விவகாரத்தில் தீா்ப்பாயம் அமைக்க அவகாசம் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்

தருமபுரி மாவட்டத்தில் 76 வாக்குச்சாவடிகளில் நெகிழி பயன்பாடில்லா பசுமைத் தோ்தல்

தில்லி பூங்காக்களில் மாதத்திற்கு 10 நாள்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்

விருதுநகா் பட்டாசு ஆலை வெடிவிபத்து: என்ஜிடி தாமாக முன்வந்து விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

