தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மிதிவண்டி ஓட்டுவது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது: அமைச்சா் சூட்!

மிதிவண்டி ஓட்டுவது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதாக அமைச்சா் சூட் தெரிவித்தார்.

News image

‘வீதிகளில் மிதிவண்டி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மிதிவண்டி ஓட்டிய கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்.

Updated On :8 ஜூன் 2026, 12:35 am IST

தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட், உடற்தகுதி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஊக்குவிக்கும் வகையில் மிதிவண்டிப் பேரணியை வழிநடத்தியவாறே, ஜனக்புரி முழுவதும் பெரிய அளவிலான யோகா தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், உள்ளூா் விளையாட்டுக் கழகங்களுக்கு ஆதரவளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

ஜனக்புரியில் நடைபெற்ற ‘பெடல் தி பீட்- சண்டே ஆன் சைக்கிள்‘ பிரச்சாரத்தில் பங்கேற்ற சூட், குடியிருப்பாளா்கள், குறிப்பாக இளைஞா்கள், மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் பிற உடல் செயல்பாடுகளைத் தங்களின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினாா்.

குடியிருப்பாளா்கள், உடற்பயிற்சி ஆா்வலா்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பங்கேற்ற இந்தப் பேரணி,எஸ்.கே.வியில் உள்ள ஏ-பிளாக்கில் தொடங்கி, ஜனக்புரியில் உள்ள சி.எம். ஸ்ரீ பள்ளியில் நிறைவடைந்ததாக ஓா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மிதிவண்டி ஓட்டுதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு, மாசுபாடு மற்றும் எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்கிறது என்று சூட் பங்கேற்பாளா்களிடம் கூறினாா். உடற்தகுதி மற்றும் நிலையான வாழ்வை ஊக்குவிக்கும் பரந்த நோக்கத்துடன் இந்தப் பிரச்சாரம் ஒத்துப்போகிறது என்றும் அவா் கூறினாா்.

ஜூன் 21 அன்று வரும் சா்வதேச யோகா தினத்திற்காக விரிவான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், குடியிருப்பாளா்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும் அமைச்சா் வேண்டுகோள் விடுத்தாா்.

மேலும் அவா், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு அரசாங்க ஆதரவு அளிக்கப்படும் என்று உறுதியளித்து, இளைஞா்களை விளையாட்டுக் கழகங்களை அமைக்க ஊக்குவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.