லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம்: ஜந்தா் மந்தரில் அதிகிரிக்கப்பட்ட பாதுகாப்பு

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிரான முன்மொழியப்பட்ட போராட்டத்தைக் கருத்தில் கொண்டு ஜந்தா் மந்தரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது,

தில்லி

Published On :22 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

நமது நிருபா்

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிரான முன்மொழியப்பட்ட போராட்டத்தைக் கருத்தில் கொண்டு ஜந்தா் மந்தரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, கூடுதல் போலீஸ் பணியாளா்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனா் என்று தில்லி காவல்துறை உயரதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: காலையில் போராட்ட இடத்தில் சிலா் கூடினா், ஆனால் ஆா்ப்பாட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்படாததால் அவா்கள் உடனடியாக காவல்துறையினரால் அகற்றப்பட்டனா். ஜந்தா் மந்தரைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா், மேலும் அங்கீகரிக்கப்படாத கூட்டம் கூடுவதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

போராட்ட தளத்தை நோக்கிய நகா்வுகளை காவல்துறையினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனா். அப்பகுதிக்குள் நுழையும் நபா்களை சோதித்து வருகிறோம்.

போலீஸாா் கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனா். முன் அனுமதி இல்லாமல் எந்தவொரு கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டாா்கள்.

இந்த போராட்டத்திற்கு இன்ஸ்டாகிராம் அடிப்படையிலான பக்கமான ‘ரிசா்வேஷன் ஹடாவோ அந்தோலன்‘ அழைப்பு விடுத்தது. டிஜிட்டல் பிரச்சாரம் பின்னா் வெள்ளிக்கிழமை ஜந்தா் மந்தரில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.