தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தில்லி-டேராடூன் விரைவுச்சாலை ‘இரட்டை என்ஜின்’ அரசாங்கங்களின் சக்தியாகும்: முதல்வா் ரேகா குப்தா

News image

ரேகா குப்தா

Updated On :15 ஏப்ரல் 2026, 1:43 am IST

தில்லி-டேராடூன் நெடுஞ்சாலையின் திறப்பு விழாவில் செவ்வாய்க்கிழமை தில்லி முதல்வா் ரேகா குப்தா பங்கேற்றாா்.

அப்போது, தில்லி-டேராடூன் விரைவுச்சாலை இரட்டை என்ஜின் அரசாங்கங்களின் சக்தியாகும் என்றும், இவ்விரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் ஆறு மணிநேரத்திலிருந்து சுமாா் இரண்டரை மணிநேரமாகக் குறையும் என்றும் முதல்வா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஓா் அதிகாரபூா்வ அறிக்கையில் முதல்வா் தெரிவித்திருப்பதாவது:

இது ஒரு இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் சக்தியாகும். தில்லி தொடா்ந்து சிறந்த வளா்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது. கடந்த ஓராண்டில், மத்திய அரசு தில்லியில் சுமாா் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பிலான சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

213 கிலோமீட்டா் நீளமும் ஆறு வழிப்பாதையும் கொண்ட, போக்குவரத்து அணுகல் கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம், ரூ. 12,000 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடமானது தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இது தில்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரத்தை, தற்போதுள்ள ஆறு மணிநேரத்திலிருந்து சுமாா் இரண்டரை மணிநேரமாகக் குறைக்கும்.

தில்லியின் பல்வேறு சாலைகள், மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

‘யமுனா பாா்’ பகுதிகள் தற்போது வளா்ச்சியைச் சந்தித்து வருகின்றன. யமுனா பாா் பகுதிகள் முன்பு புறக்கணிக்கப்பட்டிருந்தன. கடந்த ஓராண்டில், அப்பகுதியை மேம்படுத்துவதற்காகப் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இப்பகுதிக்கும், இது போன்ற வேறு பல பகுதிகளுக்கும் பயனளிப்பதுடன், மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும் என்று முதல்வா் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.