தில்லியில், இளைஞர் ஒருவர் கேரிமேன் என்ற புத்தாக்க நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். ஷாப்பிங் செல்லும் பெண்களின் உடைமைகளை தூக்கி வருவதற்கு பயிற்சி பெற்ற நபர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ள இந்த நிறுவனம் வழிவகை செய்கிறது.
இது பற்றி ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதில், ஷாப்பிங் செல்லும்போது ஆண் தோழர்களை அழைக்க வேண்டும் என்று அவசியமில்லை, நண்பன் இல்லையே என்று வருந்த வேண்டாம், இனி கேரிமேன் சேவை இருக்கிறது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது ஷாப்பிங் செல்லும்போது பெண்கள வாங்கிய உடைமைகளை சுமந்து செல்ல, கடைகளில் பணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்க என்பது போன்ற சேவைகளை பணியாளர்கள் செய்து தருவார்கள் என்று கூறப்படுகிறது.
பைகளை சுமந்து செல்லவும், எவ்வளவு நீண்ட வரிசையாக இருந்தாலும் வரிசையில் நின்று பொருள்களை வாங்கிக் கொடுக்கவும் பயிற்சி பெற்ற ஊழியர்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேரிமேன் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தில்லியின் லஜ்பத் நகரில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலான பகுதிகளுக்குள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும் இவர்கள் உதவுவார்கள்.
பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுடன் செல்வோர், ஆன்லைனில் புகழ்பெற்றவர்கள் போன்றவர்கள் இந்த சேவையை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதற்கு குறைந்தபட்ச சேவைக் கட்டணம் ரூ.79 லிருந்து வசூலிக்கப்படுகிறது.
இது மட்டுமல்ல வாகன நிறுத்துமிடங்களுக்கு வழிகாட்ட, மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது வழிகாட்டவும் இவர்கள் உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை விரைவில் தொடங்க இருப்பதாகவும் இதற்கென பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போகிறவர்கள் பற்றி கவலையில்லை! அண்ணாமலை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் | BJP
பொருள்களை எடுத்துவர உதவுகிறோம்...

இனி, சாட்ஜிபிடியால் பயனரின் வங்கிக் கணக்கைப் பார்க்க முடியும்! எப்படி? ஏன்?

தோ்தல் கருத்துக் கணிப்புகளைப் பற்றி கவலையில்லை - மு. அப்பாவு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
