விபத்துகள் என்பது பொதுவாக சாலைகளில் நிகழ்ந்தாலும், முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியம்.
பொதுவாக சில வீடுகளின் அமைப்பே அப்படி இருந்துவிடும். மேடுபள்ளமான தரைப்பகுதி, கூர்மையான படிகட்டு முனைகள், கணிக்க முடியாத தடுப்புகள் போன்றவை புதிதாக வீட்டுக்குள் வருபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
தரைப்பகுதியில் சில டைல்ஸ்கள் ஆடும் வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும்.
அனைத்து அறைகளிலும் சரியான வெளிச்சம் பரவுக்கூடிய விளக்குகளை பொருத்துவது அவசியம். எந்தவொரு இடத்தையும் இருட்டாக வைத்திருக்க வேண்டாம்.
அவ்வப்போது வீட்டின் மின் அமைப்பை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். மின் சுவிட்சுகளில் மின்சாரம் பரவினால் அதனையும் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
எங்குமே அதிக மின்சாரம் வருவதில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சில வேளைகளில் மின் ஒயர்கள் கருதும் வாசம் வரும். அதனை உடனடியாக மின் ஊழியர்களுக்கு தகவல் சொல்லி சரி செய்ய வேண்டும்.
வீட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பின், நிச்சயம் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
முக்கிய பகுதிகளில் வீடு அமைந்திருந்தால், நிச்சயம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதையும் கண்காணிக்க வேண்டும்.
அக்கம் பக்கத்தினருடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது.
நமது வீட்டில் ஏதேனும் பிரச்னை என்றால், வீட்டில் ஆள் இல்லாதபோது சிக்கல் ஏற்பட்டால் உதவிக்கு அவர்கள் ஓடி வருவதும் முக்கியம்.
தரையில் எங்காவது நீர் சிந்தினால் உடனடியாக அதனைத் துடைக்க வேண்டும்.
கழிப்பறைகள் எப்போதும் ஈரமாக வழுவழுப்பாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடையில் நிலையில் கண்ணாடி ஜன்னல்கள் இருந்தால் அதனை முன்கூட்டியே அப்புறப்படுத்திவிடலாம்.
முதியவர்கள் இருக்கும் வீடுகளில் ஈரம்கூட விபத்துகளை ஏற்படுத்தலாம்.
Summary
Accidents can happen not only on the roads but also at home, so here are some ways to prevent them.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோடை கால தீ தடுப்பு நடவடிக்கைகள்: மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

வீட்டில் எப்போதுமே ஒட்டடை சேரவே கூடாதா? இதோ வழிகள்!

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ரூ. 282 கோடி லாபம்!

கண்ணமங்கலத்தில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


