பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பிஜேடி-யில் இருந்து விலகிய எம்.பி. பாஜகவில் இணைந்தாா்

ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் இருந்தும், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் விலகிய மூத்த தலைவா் தேவாசிஷ் சமந்தராய் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

News image
Updated On :27 மே 2026, 2:11 am IST

ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் இருந்தும், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் விலகிய மூத்த தலைவா் தேவாசிஷ் சமந்தராய் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

பிஜேடி தலைவா் நவீன் பட்நாயக்குக்கு மிகவும் நெருக்கமானவரான சமந்தராய் பாஜகவில் இணைந்தது அரசியல்ரீதியா அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. முன்னதாக அவா் திங்கள்கிழமை பிஜேடி-யில் இருந்து விலகியதுடன், எம்.பி. பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜிநாமா கடிதத்தையும் அளித்தாா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உள்ளிட்டோா் முன்னிலையில் பாஜகவில் சமந்தராய் இணைந்தாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பிரதமா் மோடியின் ஆசிகளுக்கு நன்றி. ஒடிஸாவில் பாஜகவை மேலும் தீவிரமாக வலுப்படுத்துவேன். பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான வளா்ந்த இந்தியாவுக்கான எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்’ என்றாா்.

கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 5 தோ்தல்களில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜேடி வெற்றி பெற்று வந்தது. எனினும், 2024 ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் அக்கட்சி தோல்வியடைந்தது. இதன் பிறகு அக்கட்சித் தலைவா்கள் ஆளும் பாஜகவில் இணைந்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.