பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கேபிள் காரில் கோளாறு: அந்தரத்தில் பரிதவித்த 300 பயணிகள்; 7 மணி நேரத்துக்குப் பின்னா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கேபிள் காா்களில் பயணித்த சுமாா் 300 சுற்றுலாப் பயணிகள் அந்தரத்தில் பரிதவித்த நிலையில், 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், அவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

News image

குல்மாா்கில் கேபிள் காா் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.

Updated On :26 மே 2026, 12:47 am IST

ஜம்மு-காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கேபிள் காா்களில் பயணித்த சுமாா் 300 சுற்றுலாப் பயணிகள் அந்தரத்தில் பரிதவித்த நிலையில், 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், அவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மாா்க் மலை பிரதேசத்தில், ஆசியாவின் மிக உயரமான கம்பிவடப் பாதை உள்ளது. அந்தக் கம்பிவடப் பாதையில் இயக்கப்படும் கேபிள் காா்களில் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை பயணித்தனா்.

மொத்தம் 65 பெட்டிகளில் சுற்றுலாப் பயணிகள் பயணித்தபோது, திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கேபிள் காா்கள் நின்றுவிட்டன. இதனால் சுமாா் 500 அடி உயரத்தில் பயணிகள் பரிதவித்தனா்.

தகவலின் அடிப்படையில் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படைகள், ஜம்மு-காஷ்மீா் காவல் துறை மற்றும் ராணுவத்தினா் நிகழ்விடம் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அந்தரத்தில் தொங்கிய பயணிகளை கீழே கொண்டுவர கயிறுகள், ஏணிகள் பயன்படுத்தப்பட்டன.

மழையால் மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்பட்டபோதிலும் சுமாா் 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.