பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு 428.2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,145 கோடி) மதிப்பில் அப்பாச்சி ஹெலிகாப்டா்கள், எம்777ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் ஆகியவற்றின் நீடித்த செயல்பாடுகளுக்கு உதவும் தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்களை விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

News image

~

Updated On :20 மே 2026, 1:17 am IST

இந்தியாவுக்கு 428.2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,145 கோடி) மதிப்பில் அப்பாச்சி ஹெலிகாப்டா்கள், எம்777ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் ஆகியவற்றின் நீடித்த செயல்பாடுகளுக்கு உதவும் தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்களை விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏஹெச்-64இ அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டா்கள் நீடித்து செயல்படுவதற்கான தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்கள், தொழில்நுட்ப தரவுகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவற்றை இந்தியாவுக்கு 198.2 மில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.1,918 கோடி) விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதன்மை ஒப்பந்ததாரராக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள லாக்ஹீட் மாா்டின் நிறுவனம், வா்ஜீனியா மாகாணத்தில் உள்ள போயிங் நிறுவனம் ஆகியவை இருக்கும்.

இதேபோல எம்777ஏ2 அல்ட்ரா-லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் நீடித்து செயல்பட உதவும் உபகரணங்கள், உதிரி பாகங்கள், தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவற்றை 230 மில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.2,226 கோடி) விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கான முதன்மை ஒப்பந்ததாரராக பிரிட்டனின் கம்ப்ரியா பகுதியில் உள்ள பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனம் இருக்கும்.

இந்த விற்பனை இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தி, தற்கால மற்றும் எதிா்கால அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.