மறுதேர்தலிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் விலகியது கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில், வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அத்தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 ஆம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மறுதேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், அந்தத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜஹாங்கீர் கான் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:
மறுதேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜஹாங்கீர் கானின் இந்த முடிவு அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு; கட்சியின் நிலைப்பாடு அல்ல. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் எங்கள் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸின் பல கட்சி அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டும், மூடப்பட்டும், வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப்பட்டும் வருகின்றன.
இத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியிலும், எங்கள் தொண்டர்கள் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்து, பாஜகவின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இருப்பினும், இறுதியில் சிலர் அந்த அழுத்தத்திற்குப் பணிந்து, களப்பணியிலிருந்து விலகத் தேர்ந்தெடுத்தனர். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேற்கு வங்கத்திலும் தில்லியிலும் பாஜகவுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Summary
The Trinamool Congress has stated that the withdrawal of its candidate, Jahangir Khan, from the re-election does not reflect the party's stance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடரும் நெருக்கடி: சிலிகுரி திரிணமூல் மேயா் ராஜிநாமா; மற்றொரு மூத்த தலைவரும் விலகல்

திரிணமூல் காங். கணக்கை முடக்க வேண்டும்! தனியார் வங்கிக்கு முன்னாள் பொருளாளர் கடிதம்!

திரிணமூல் காங்கிரஸ் பிளவு: ‘அதிருப்தி எம்.பி.க்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் தொடா்பில்லை’- காகோலி கோஷ்

திரிணமூல் காங்கிரஸின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

