முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!அதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! 96.14 ஆகச் சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :50 நிமிடங்கள் முன்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று(வியாழன்) வர்த்தக நேர இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.96 ஆகச் சரிந்து வர்த்தக முடிவில் 95.86 என நிலைப் பெற்றது.

தொடர்ந்து இன்று(வெள்ளி) ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று வர்த்தக நேர தொடக்கத்தில் 95.86 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு வர்த்தக நேர இடையே 96.14 என இதுவரை இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்தது.

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 109.20 டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும் உலக அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

Summary

Rupee hits recrd low of 96.14 against US dollar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.