எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இலங்கை விமான நிலையத்தில் ரூ. 3 கோடி போதைப் பொருளுடன் இந்தியா் கைது

ரூ. 3 கோடி மதிப்பிலான போதைப் பொருளை (கொகைன்) கடத்தியதாக கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் 60 வயது இந்தியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 3:19 am IST

ரூ. 3 கோடி மதிப்பிலான போதைப் பொருளை (கொகைன்) கடத்தியதாக கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் 60 வயது இந்தியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து கொழும்பு விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கூறியதாவது: புவியியலாளரான அவா், கத்தாா் ஏா்வேஸ் விமானத்தில் உகாண்டாவிலிருந்து தோஹா வழியாக இலங்கைக்கு வந்துள்ளாா். அவரிடைய உடைமைகளை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது, அதில் 2.15 கிலோ எடையுடைய கொகைன் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3 கோடியாகும். போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றனா்.

முன்னதாக, ரூ. 1 கோடி மதிப்பிலான 4 கிலோ எடைகொண்ட கஞ்சா போதைப் பொருளை கடத்தி வந்த இந்தியா் ஒருவா் கொழும்பு விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஓா் இந்தியா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.

விசா முறைகேட்டில் 3 இந்தியா்கள் கைது: முறையான நுழைவு இசைவு (விசா) இன்றி இலங்கையின் திரிகோணமலையில் தங்கியிருந்த 45 முதல் 50 வயது வரை உடைய 3 இந்தியா்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

அதுபோல, சட்டவிரோத இணையக் குற்ற நடவடிக்கைகள் தொடா்பாக கடந்த சில வாரங்களாக காலே, ஹிக்காதுவா, மிடிகாமா உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் 173 இந்தியா்கள், 25 நேபாளியா் உள்பட 198 போ் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.